அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சார்பில் "அன்னை விழா" கடைபிடிப்பு


அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் இன்று திருச்சிற்றம்பலம் அரங்கில் "அன்னை விழா" மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பேராசிரியர் முனைவர் அன்னபூரணி அனைவரையும் வரவேற்று பேசினார். பின், அன்னை சாரதா தேவியின் உபதேச மொழிகள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவிகள் பலர் எடுத்துரைத்தனர்.

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முனைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், ஜனவரி மாதத்தில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் குருபூஜை முடிந்தவுடன் நமது சாரதாலயத்தில் அன்னைக்கு எடுக்கப்படுகின்ற முக்கிய விழாவாக இது அமைந்திருக்கிறது என்றும், ஆன்மீகப் பணியை சமூகப் பணியாக ஆற்றி பொதுநோக்கத்தோடு தம் வாழ்நாள் முழுவதையும் ஆன்மீக முழுமை நிறைந்ததாக மாற்றியவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாமணி தேவியாரும் ஆவர் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஸ்ரீ சாரதா மடத்தின் ஆன்மீக பேச்சாளர் பிரவ்ரார்ஜிகாயதிந்திர பிராணா, "நவீன பெண்களுக்கு தூய அன்னை சாரதையின் உபதேசங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

நிரைவாக, வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் சாரதா நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், முன்னாள் துணை வேந்தர் முனைவர் சரோஜா பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...